அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…. 25.01.2022
“ பரவசம் “

பதியமிட்ட விதையொன்று பயிராகி செடியாகி
முதல் பொட்டு பூவாகி பூத்திருக்கும் செடியில்
பார்த்திருக்கும் கண்கள் பரசவத்தில் பொங்கும்
இதயத்தின் துடிப்பு தித்திக்கும் பரவசம் !

அடைவைத்த முட்டைக்காய் காத்திருக்கும் உள்ளம்
அழகிய குஞ்சுகள் அவதரிப்பைக் காண
அந்தநாளை எண்ணிஎண்ணி ஆனந்தம் பொங்கும்
அங்கொரு முட்டையில் மூக்கைக்கண்டு பரவசம் !

சுயகவி ஒன்றினை சுகமாகய் படைத்துவிட்டு
என்றோ ஒருநாள் ஆண்டுகள் கழித்து
மீண்டும் அதனை எடுத்துப் படிக்க
மீளா இன்பத்தில் இதயம் துடிக்கும் பரவசம்

இரவு பகலாய் இயற்றிய படைப்பு
கருவாய் உருவாய் கைகளில் தவழும்
உறவும் நட்பும் உற்சாகம் ஊட்ட
விழிகள் பொங்கும் வியப்பின் பரவசம் !

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading