சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பரவசம்!
தாரம் ஆனது பரவசம்
தாய்மை அடைந்தது பரவசம்
தங்கமகனை அள்ளி அணைத்து
தாய்ப்பால் ஊட்டியதும்
ஆனந்தப் பரவசத்தில்
துள்ளியது என்மனம்!
தித்திக்கும் முத்தம் தந்து
அரும்பு மொழிபேசி
குறும்பு சேட்டை செய்து
கவலைகள் மறக்கவைத்தவன்
என் உலகம் என உருவானவன்
கனவுகளின் கருவானவன் கவிதைக்குப் பொருளானவன்
தாய்மையே பெண்மைக்கு பரவசம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading