தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 161

ஈர ஆடை
பாடசாலை
மணியோசை கேட்டு
மருண்டு ஓடி வந்து
நிரையாக நின்று
இறை பாடல் பாட
ஒரு மாணவனின் கை
மறு மாணவனின்
ஆடையில் பட்டதே !
ஈரம் காயாத
ஈர ஆடையது !
கண்களில் கேள்வியுடன்
அவனைப் பார்க்க
ஒற்றை ஆடையே
உடுத்த இருப்பதால்
உலர்த்துகின்றேன்
உடல் சூட்டில்
ஒவ்வொரு நாளும்
என்றான்
ஈரமாகி போனதே
இவன் கண்கள் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan