கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலைப்பு – சாந்தி

நஞ்சுதுவைத்த அம்பாய் நெஞ்சைசுடும் வார்த்தை
அள்ளிதெளிக்கும் போது
ஆறு மனமே ஆறு

ஐம்புலனை அடக்கும் ஆற்றல் உள்ளபோதும் சாந்திகொள்ள மரறுப்பின் சரிந்துவிடும் கோட்டை

இரத்தஅழுத்த உயர்வைகுறைக்கும் சாந்தி
இதயமேநீ அமைதிகொள்
உடல் நலம்பெற ஏந்தி

பொறுமையின் எல்லை. பெருமைமிகு சாந்தி பெருமிதம் கொள்வேன் படர்ந்திடு எம்மில்

போற்றுவோர் போற்றிட தூற்றுவோர் தூற்றிட ஏற்றிவிடும் ஏற்றருளும் எண்ணத்தின் சாந்தி

சாந்திகொள் மனமே சந்தர்ப்பம் உன்னை கோபம்கொள்ளச் செய்யும்
கோடிபெறும் தணிவாய்

நன்றி வணக்கம்

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading