நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நகுலவதி தில்லத்தேவன்

வியாழன் கவி 31.3.22

பாரெல்லாம் பதை பதைக்குது.

பசுமை நிறைந்த பார் இப்போ
புரட்சி நிறைந்த போர்
பழைய புதிய கட்டிடம்
ஒரு நொடியில்
தவிடுபொடியானதே
நாடு சுடுகாடானதே .

கதறிடும் மக்களின் கூட்டம்
துப்பாக்கியின் ஓசையும்
வானைப் பிளக்குது
செத்து மடியும் உயிர்கள்
அனாதைகள் வீதி எங்கும்
ஓலம்.

நாடு நாடாய் அவலம்
பாடாய் படுத்து துன்பம்
எரிபொருள் விலை உயரது
விலைவாசியும் ஏறுமுகம்
நாடுகள் கூடி பேசியே
முடிவுகள் தேடி ஓடுது
விடிவும்
காணவில்லை.

பசுமையும் இறங்கு முகம்
பாரில் தண்ணீர் பஞ்சம்
தோட்டமும் துறவும் ஓட்டம்
அவனிக்கு வருமே பஞ்சம்.

அதிபருக்கும் வாணி க்கும்
விஐயகௌரிக்கும், தொடரும்
கவி ஆய்வு தட்டிக் கொடுப்புக்கும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan