பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

இரா்விஜயகௌரி

உயிர் நேயம்

வெந்து தணிந்து வேரற அழிந்து
சொத்து சுகமெலாம் விட்டே களைந்து
ஆதி முதலாய் அனைத்தும் தொலைத்து
தேடிய வாழ்விது அகதியின் முத்திரை

காலங்கள்ஓடின காவியமாயினர்
உதிரமெழுதிய உறவும் மறந்ததோ
பின்னிப் பிணைந்த பேருறவின் பெருந்தழை
ஏழைகளாயின் ஏங்கித் தவிப்பதோ

மானுடநேயம் நித்தமும் விதைத்து
கருணையின் தொடுகையின் -நம்
கரங்களை பிணைத்து உயிர்களை
வாடும்உயிர்களை காப்பதெம்கடமை

யாசகம் என்றோர் வாசகம் வேண்டாம்
யாவரும் நமது உறவெனக் கொண்டால்
இதயம் இழைந்தெழும். இறைபணி போல
மலரும் வாழ்வில்மணிவிளக்கெனக் கலப்போம்

நாமே கடவுளர்நல்லவை தொடுப்பின்
அவரே கருவறை கனிந்து கலந்தால்
உயிர் நேயம் என்பது உள்ளத் தொடுகை
உயரிய அன்பில் பிழைபட வரைவோம்

Nada Mohan
Author: Nada Mohan