நேவிஸ் பிலிப்

08/03/23
கவி இல(93)
நிமிர்ந்த சுவடுகளாய் வாழும் சுவடுகள்

தமக்கென வாழா
எமக்கென வாழும்
ஒளி தரும் தியாகச் சுடராய்
எம்மை மகிழ்வித்து மகிழ்பவர்

வளமான வாழ்விற்காய்
அல்லும் பகலும் ஓடி்
திரவியம் தேடி
அசையம் அசையா சொத்துக்களும்

பயன்தரும் மரங்களும் பயிர்களும்
தோட்டத்திலே நட்டு வைத்து
தண்ணீர் பாய்ச்சி வளர்த்தெடுத்து
காயைக் கனியாகப் பறித்தெடுத்து
சுவைத்த தருணங்கள்

பிள்ளைகளுக்கு பாசமிகு தந்தையாய்
தளர்ந்து நிற்கும் வேளையிலே
தாங்குகின்ற சுமை தாங்கியாய்
அணைத்துக் காக்கும் என்னருமைத் துணைவர்யக

நெஞ்சமுருகி நெகிழ
நன்றியோடு நினைக்கின்றேன்
எனனிதயச் சுவரினிலே என்றும்
அழியாத சுவடாக என்னோடு வாழ்பவர்
என்னருமைக் கணவர்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading