சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெற்றோரே…
பேறுகள் பலவாகி
பெரும்பேறும் வாழ்வாகி
சேய்களின் காப்பாகி
செம்மையுற வாழ்ந்தவர்கள்

செப்புகின்ற பட்டறிவும்
சீராக்கும் வாழ்வறமும்
காப்பரணாய் வேலியிட்டு
காத்திட்ட பெற்றோரே

கடனது பாரியது
காலத்தால் ஈடுசெய்ய முடியாது காத்திடமாய்
கணக்கிறது

ஞாலத்தில் நாம் வாழும்
நல் வாழ்வின் வெற்றியே
உங்களின் பாடுகளின்
உன்னதத்தை வெளிச்சமிடும்

வேராகி விழுதாகி
விருட்சமாய்
தொடர்கின்றோம்
தூரிகையாய் துலங்க வைத்தீர்
பேருவகைப் பேறு பெற்றோம்
பெருமையுடன் வாழ்கின்றோம்
நிதமுமாய் சான்றாகும்
நீங்களிட்ட அறமே
எம்மோடு
அறிவுரையே வாழ்வோடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan