ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பகலவன்
நானும் போய்பார்த்தேன்
நாலு நாடுகளை
நம் நாடு போல
நாள் இரவு என்ற ஒரு
சீரை கண்டிலேன்
சீமை நாடெல்லாம்
கோடை என்றால்
கொழுத்தும் வெய்யில்
இருள் சூழ மணி பத்து ஆகும்
மாரி என்றால் மழைக்கால் இருட்டு
மாலை நாலுக்கே இருட்டும்
எங்களுக்கு பகலவன் இறைவனைப்போல்
என்றும் நன்றே செய்வான்
சீமை நாடு எங்கும்
குளிர்காலம் உறை பனி மூடும்
ஊசி போல உடம்பெல்லாம்
உள்ளேறி குளிர் வாட்டும்
எங்கள் நாடுகளில்
இத்தொல்லை கிடையாது
பகலவனை வாழ்த்தி பணிவோம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading