10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
annaikku nikarundo avaniyile
09.05.24
கவி ஆக்கம்-315
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே
அன்புக்கு விலையுண்டோ பவனியிலே
பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே
எத்தனை துன்பம் வந்திடினும் மறந்து
அத்தனையும் கனிவோடு இன்பம் தந்து
தன்னுயிர்ச் சொத்தாகப் பாதுகாத்து
பத்து மாதம் தன் வயிற்றில் கரு சுமந்து
பெற்றெடுத்து இனிதாய் வளர்த்த பெருமை
தாயின் தரத்துக்கு வரமேது
சேய்க்குத் தலையிடி எனில்
தனக்கு வந்ததெனப் புழு போலத்
துடித்துத் துவண்டிடும் அருமை
நோய் வந்திடினும் பாயில் படுக்காது
நெருப்பில் வெந்து வாய்க்கு ருசியாக
வயிறார உண்பது பார்த்து மகிழும்
அன்னையே உனக்கு நிகருண்டோ
அவனியிலே அன்புத் தெய்வமே .

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...