ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இதெல்லாம் இப்போ எங்கே

ஜெயம் தங்கராஜா

கவி 753

இதெல்லாம் இப்போ எங்கே

மனித உரிமையென்று வாய்கிழியச் சத்தம்
தணிந்ததா இதுவரையில் மானிடர்க்குள் யுத்தம்
புனிதராக எவருமில்லை உள்ளமில்லை சுத்தம்
தனிமனித உரிமைபெற போராட்டமே நித்தம்

சாதியென்றும் மதமென்றும் ஆறாமறிவு பார்க்கும்
பாதியிலே வந்தவற்றை பரம்பரைக்குச் சேர்க்கும்
விலங்குகள் பறவைகள் வாழ்க்கையதோ அருமை
விலக்கிவைத்து வாழ்வதிலே மனிதருக்குப் பெருமை

மோலோர் கீழோர் என்கின்ற பாகுபாடு
ஆள் யாரென ஆராய்சியில் ஈடுபாடு
கேட்டால் நாங்கள் ஓரினமே பிரிவேது
தீட்டாய் எண்ணிடுவார் தன்மட்டில் வரும்போது

வீசுகின்ற காற்றும் பேதம் பார்ப்பதில்லை
வாசத்தை தருகின்ற மலர்களுக்கும் பேதமில்லை
வெளிச்சந்தரும் ஆதவன் உயர்ந்தவர்க்காய் உதிப்பதில்லை
இழிவுநிலை எண்ணமதோ மாந்தர்க்கு மாறவில்லை

மனிதம்பற்றி சிந்திக்க மனிதன் மறந்துவிட்டான்
குனிந்தவனை குட்டிக்குட்டி பெருமைகொள்ள பழகிவிட்டான்
தீண்டாமை சட்டப்பிரிவு பதினேளால் பயனில்லை
ஆண்டவரின் கோவிலுக்குள் செல்வதற்கும் தடையெல்லை

ஜெயம்
11-12-2024

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading