இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வாழ்வியல் கலையும், தொடரா நிலையும்

சாந்தினி துரையரங்கன்

தமிழ் வரலாறு சொல்லும் வாழ்வியல் கலைகளை
வாழவைக்கின்றோமா ?அவற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
மனிதனின் தோற்றத்தின்
வளர்ச்சிப் படிகளே
கலைகளின் வளர்ச்சி.
வாழ்வியல் கலைகளுடன்
சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்
கூத்து, பாட்டு என வளர்ந்த
என் வாழ்வில்
இக்கலைகளை
மறக்கத்தான் முடியுமா ?
சிலர் குறை கூறல்களுடன் மட்டுமே தொடரும்
இக்கலைகளை
அவரவர் முன்னெடுப்புக்களால்
அடுத்த நிலைக்கு
உயர்த்த முடியாதா?
புலத்தில் சில பள்ளிகள்
இக்கலைகளை
வளரும் தலைமுறைகள்
இடையே கொண்டு வருகின்றனர்.
லண்டனில் சுடர் கலைப்பள்ளி ஆசிரியரின் முன்னெடுப்புடன் பாமகத்தின் அனுசரணையுடனும் வருடம் தோறும் நாட்டார் கதம்பம் மூலம் இக்கலைகள் மேற்பார்வை செய்யப்படுவதை நீங்கள் அறிவீர்கள் தானே!
இயக்குனர் நடாமோகன் அவர்கள் தமிழ் மண் வளக் கலைகள் ஊக்குவிப்பு மாதம் என பெயரிட்டமை
நீங்கள் அறிவீர்கள் தானே?
இக்கலைகளுடன் வாழும் கலைஞர்களை
மதித்த்து
எம் வரலாற்றை
நாம் அறிவும்
அறிய வைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading