நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாசி
மாசிமாதம்
மனதிற்கு மகிழ்வு தரும்
அண்ணா வருவார் கொழும்பால
சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக
அவர் போக இல்லை
எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல
இரவிரவாய் நித்திரை விழிப்பு
நண்பிகளுன் நல்ல கொண்டாட்டம்
தீர்த்தக் குளமுடன் தித்திக்கும் உணவு
சைவ உணவு தரும் நற்சுவை
அம்மாவுக்கும் அதிலொரு உருண்டை
அக்கா எடுத்து பையில்வைப்பார்
நல்லதங்காள் காத்தவராயன் கூத்து
இப்படியான பொழுது போக்குகள்
இளம் காதல் சோடிகள் இங்கு
காணாமல் போவதும் உண்டு
எத்தனை இன்பங்கள் எம்நாட்டில் உண்டு
இவை எல்லாம் இனியெப்போ வரும்
இதில் ஒரு விசேடம் அண்ணா கேட்பார்
மலர் இன்று எத்தனை ஏக்கர்
உழுதாய்? வாலிப்ப் பருவம்!
வாய் பேசக்கூடாது/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan