“பள்ளிப் பருவத்திலே”

நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும் கற்றுக் கொண்ட
பொன்னான தருணங்கள்

வண்ணக் கனவுகளாய்
எண்ணப் பறவைகளாய்
அழியாத நினைவுகளாய்
சிறகடித்துப் பறக்கிறதே

வெள்ளைச் சீருடையும்
புத்தகப் பையுமாய்
ஆசான்கள் துணை கொண்டு
அழியாத கல்விதனை
தாய் மொழியால் கற்றுத் தேர்ந்து

போட்டிகளில் தீவிரம்
தோழியரோடு கும்மாளம்
வென்றிடும் ஆர்வம்
வெற்றிக் களிப்பின் ஆரவாரம்

இதயத் துடிப்புக்கு
அர்த்தம் தந்தது்
பள்ளியில் கொண்ட நட்புக்கள்
பள்ளிவாழ்வில் கண்ட இன்பம்
மீண்டும் ஒரு முறை வாழ்ந்திட ஆசை..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading