“பள்ளிப் பருவத்திலே”

நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும் கற்றுக் கொண்ட
பொன்னான தருணங்கள்

வண்ணக் கனவுகளாய்
எண்ணப் பறவைகளாய்
அழியாத நினைவுகளாய்
சிறகடித்துப் பறக்கிறதே

வெள்ளைச் சீருடையும்
புத்தகப் பையுமாய்
ஆசான்கள் துணை கொண்டு
அழியாத கல்விதனை
தாய் மொழியால் கற்றுத் தேர்ந்து

போட்டிகளில் தீவிரம்
தோழியரோடு கும்மாளம்
வென்றிடும் ஆர்வம்
வெற்றிக் களிப்பின் ஆரவாரம்

இதயத் துடிப்புக்கு
அர்த்தம் தந்தது்
பள்ளியில் கொண்ட நட்புக்கள்
பள்ளிவாழ்வில் கண்ட இன்பம்
மீண்டும் ஒரு முறை வாழ்ந்திட ஆசை..

Nada Mohan
Author: Nada Mohan