” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உறைபனி 97

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026

பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும் புதர்களும் புகலிடம்
புரியாத புதுமையாய் மறைய

பசுமை போர்த்திய காடுகளெல்லாம்
பனித்திரை போர்த்திப் படுத்திருக்க
உயிர்ப்பின் ஓசை அடங்கிப்போய்
உறைபனி ஆளுமை செய்கிறது

பச்சை இலைகள் மறைந்து போக
இச்சை இன்றி உலகம் உறங்க
காலத்தின் ஓட்டம் உறைந்து இங்கு
கவிதை பாடுது உறைபனி என்று!

ஒரு இராத்தல் பாண் வாங்க
பல இராத்தல் உடை போட்டு
உறங்க முடியாமல் கால் வலியும்
உயிரை வாங்குதே உறைபனியும்

உறைபனி உருகினால் நீராகும்
உள்ளப்பகை உருகினால் உறவாகும்!
உறைந்த மனங்கள் உருகிவிட்டால்
உலகம் முழுதும் வசந்தமாகும்!

Jeba Sri
Author: Jeba Sri