Anita’s

பூக்கும் புத்தாண்டு
……………………………….

பூக்கின்ற புத்தாண்டில்
புலம்பெயர்ந்தார் நெஞ்சினிக்க
பூங்குயில்கள் இசையமைக்க
பொன்மயில்கள் நடனமிட
காக்கின்ற அன்னையர்கள்
கைநிறைய பூத்தூவ
ஆக்கின்ற உழைப்பாளி
அனைவருமே மகிழ்ந்திருக்க
நோக்கின்ற இடமெல்லாம்
நூலிடையார் சிரிப்புதிர
வாக்கினிலே சான்றோர்கள்
வாழ்த்துகளை வழங்கிடவே!

ஆங்கிலத்துப் புத்தாண்டும்
அடுத்துவரும் தை யாண்டும்
எல்லோரும் வாழ்ந்திடவே
எந்நாடும் மகிழ்ந்திட வே
செங்கரும்பும் செந்தேனும்
சீர்மஞ்சள் இஞ்சியுடன்
கொஞ்சிடவே பல்சுவைகள்
சேந்திடவே பொங்கலிட
வந்தோர்கள் மகிழ்ந்திடவே
வாத்தியங்கள் முழங்கிடவே
இந்தநல்ல புத்தாண்டை
இனிதுறவே வரவேற்போம் !

– ஆசிரியை
– அபிராமி கவிதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading