மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

annaikku nikarundo avaniyile

09.05.24
கவி ஆக்கம்-315
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே

அன்புக்கு விலையுண்டோ பவனியிலே
பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே

எத்தனை துன்பம் வந்திடினும் மறந்து
அத்தனையும் கனிவோடு இன்பம் தந்து
தன்னுயிர்ச் சொத்தாகப் பாதுகாத்து
பத்து மாதம் தன் வயிற்றில் கரு சுமந்து
பெற்றெடுத்து இனிதாய் வளர்த்த பெருமை

தாயின் தரத்துக்கு வரமேது
சேய்க்குத் தலையிடி எனில்
தனக்கு வந்ததெனப் புழு போலத்
துடித்துத் துவண்டிடும் அருமை

நோய் வந்திடினும் பாயில் படுக்காது
நெருப்பில் வெந்து வாய்க்கு ருசியாக
வயிறார உண்பது பார்த்து மகிழும்
அன்னையே உனக்கு நிகருண்டோ
அவனியிலே அன்புத் தெய்வமே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading