16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
annaikku nikarundo avaniyile
09.05.24
கவி ஆக்கம்-315
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே
அன்புக்கு விலையுண்டோ பவனியிலே
பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே
எத்தனை துன்பம் வந்திடினும் மறந்து
அத்தனையும் கனிவோடு இன்பம் தந்து
தன்னுயிர்ச் சொத்தாகப் பாதுகாத்து
பத்து மாதம் தன் வயிற்றில் கரு சுமந்து
பெற்றெடுத்து இனிதாய் வளர்த்த பெருமை
தாயின் தரத்துக்கு வரமேது
சேய்க்குத் தலையிடி எனில்
தனக்கு வந்ததெனப் புழு போலத்
துடித்துத் துவண்டிடும் அருமை
நோய் வந்திடினும் பாயில் படுக்காது
நெருப்பில் வெந்து வாய்க்கு ருசியாக
வயிறார உண்பது பார்த்து மகிழும்
அன்னையே உனக்கு நிகருண்டோ
அவனியிலே அன்புத் தெய்வமே .

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...