Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-03.01.2022 திங்கள்
கவி இலக்கம்-1434
ஒளியேற்றி வணங்கிடுவோம்
———————————–
ஆண்டொன்றை தந்த இறைவனும்
அறைகூவல் விடுக்கிறார் அன்றாடம்
இயற்கையை தந்தேன் இயல்பாய் வாழுங்கள்
எல்லோரும் வையகத்தில் நலம் பெற்று வாழவே
புவி போற்ற வாழ்வதற்கு பல அற்புதங்கள் செய்தவர்
மாண்பற்ற செயல்களாலே மனம் நோகின்றார்
மனிதர்கள் விரும்பா வேதனை தலையாக உள்ளது
வாழ்வில் இருள் அகற்றி பேரொளி எங்கும் பரவ
உள்ளத்து இருள் அகன்று தொலைந்திட
சொந்தமெலாம் உறவு கொண்டாடி மகிழ்ந்திட
காலமெலாம் இறையருள் உதவிட
புனிதத்தை போற்றி புவிதனில் வாழ்ந்திட
ஒளியேற்றி வணங்கிடுவோம் இறைவனையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading