Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-03.01.2022 திங்கள்
கவி இலக்கம்-1434
ஒளியேற்றி வணங்கிடுவோம்
———————————–
ஆண்டொன்றை தந்த இறைவனும்
அறைகூவல் விடுக்கிறார் அன்றாடம்
இயற்கையை தந்தேன் இயல்பாய் வாழுங்கள்
எல்லோரும் வையகத்தில் நலம் பெற்று வாழவே
புவி போற்ற வாழ்வதற்கு பல அற்புதங்கள் செய்தவர்
மாண்பற்ற செயல்களாலே மனம் நோகின்றார்
மனிதர்கள் விரும்பா வேதனை தலையாக உள்ளது
வாழ்வில் இருள் அகற்றி பேரொளி எங்கும் பரவ
உள்ளத்து இருள் அகன்று தொலைந்திட
சொந்தமெலாம் உறவு கொண்டாடி மகிழ்ந்திட
காலமெலாம் இறையருள் உதவிட
புனிதத்தை போற்றி புவிதனில் வாழ்ந்திட
ஒளியேற்றி வணங்கிடுவோம் இறைவனையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading