Jeyam

பாமுகப் பூக்கள் 

பாவலர் ஈர்ப்பதால் உருவாகி 

பாமுகப் பூக்களாய் வெளியாகி 

பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி 

ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி

கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம் 

உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர் மனம்

தொல்தமிழின் அற்புதத்தை அங்குகண்டேன்

சொல்லமிழ்தை செவிகொண்டே உண்டேன் 

பா.வை.ஜெ இன் அழகானதொரு பாணிநடை

பாவை ஆக்குவோர்க்கது பெருங்கொடை

பாமுகப்பூக்களாம் இந்த வெளியீடு

காவியதே காவியத்தை மொழியோடு. 

ஜெயம்

17-01-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading