Jeyam

பாமுகப் பூக்கள் 

பாவலர் ஈர்ப்பதால் உருவாகி 

பாமுகப் பூக்களாய் வெளியாகி 

பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி 

ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி

கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம் 

உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர் மனம்

தொல்தமிழின் அற்புதத்தை அங்குகண்டேன்

சொல்லமிழ்தை செவிகொண்டே உண்டேன் 

பா.வை.ஜெ இன் அழகானதொரு பாணிநடை

பாவை ஆக்குவோர்க்கது பெருங்கொடை

பாமுகப்பூக்களாம் இந்த வெளியீடு

காவியதே காவியத்தை மொழியோடு. 

ஜெயம்

17-01-2022

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading