Jeyam

சாந்தி

குழம்பிப் போயிருக்கு காலமடா 

புலம்பியே கழியுது நாளுமடா 

சாந்தியது மனதில் பிறந்திடுமா 

ஏந்தியதை மண்வாழ்வும் சிறந்திடுமா 

நாளும்பொழுதும் இயந்திரகதியாக அலைச்சல் 

சூழும் நீளுமழுத்தங்களால் மனவுளைச்சல் 

எனக்கான நடவடிக்கைகளின் அதிகரிப்பு 

கணக்கில்லாப் பளுக்களால் உத்தரிப்பு 

தேவையற்ற விவகாரங்கள் ஆக்கிரமிப்பு 

கோர்வையாக பிரச்சினைகள் கையிருப்பு 

எங்கும் எதிலுமே நிம்மதியின்மை 

தங்கும் வரைக்கும் இதுவேயுண்மை. 

ஜெயம்

20-02-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading