முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 161

ஈர ஆடை
பாடசாலை
மணியோசை கேட்டு
மருண்டு ஓடி வந்து
நிரையாக நின்று
இறை பாடல் பாட
ஒரு மாணவனின் கை
மறு மாணவனின்
ஆடையில் பட்டதே !
ஈரம் காயாத
ஈர ஆடையது !
கண்களில் கேள்வியுடன்
அவனைப் பார்க்க
ஒற்றை ஆடையே
உடுத்த இருப்பதால்
உலர்த்துகின்றேன்
உடல் சூட்டில்
ஒவ்வொரு நாளும்
என்றான்
ஈரமாகி போனதே
இவன் கண்கள் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan