K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 161

ஈர ஆடை
பாடசாலை
மணியோசை கேட்டு
மருண்டு ஓடி வந்து
நிரையாக நின்று
இறை பாடல் பாட
ஒரு மாணவனின் கை
மறு மாணவனின்
ஆடையில் பட்டதே !
ஈரம் காயாத
ஈர ஆடையது !
கண்களில் கேள்வியுடன்
அவனைப் பார்க்க
ஒற்றை ஆடையே
உடுத்த இருப்பதால்
உலர்த்துகின்றேன்
உடல் சூட்டில்
ஒவ்வொரு நாளும்
என்றான்
ஈரமாகி போனதே
இவன் கண்கள் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading