Selvi Nithianandan

பிரிவு

நான்கு வாரமும் கடந்து
நாளும் மெல்லென நகருது
நாட்டியம் நிகழ்வு என்றிட்டா
நல்பாங்குடன் முதல் நிற்பார்

பெண்ணியம் அவரின் பேச்சு
கண்ணியம் செயலின் வீச்சு
மண்ணிலம் எனும் மூச்சு
மடிந்ததே உயிரின் மூச்சு

பல்திறன் ஆக்கம் வெளிப்பாடு
பா வடிப்பதில் தனித்துவ கோட்டுபாடு
புன்னகை வதனம் கண்ணோடு
புற்றுநோய் தாக்கமும் அவரோடு

பா முகத்து உறவுவாென்றின் பிரிவு
பக்கபலம் இழந்ததிட்ட சரிவு
படைப்பாளி ஊக்கிவித்த நிகழ்சி
பார்போற்ற வாழுமே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading