மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -165
தலைப்பு ! 24.03.2022
“ துளி நீர் “
உள்ளம் கலங்கி உயிரைப் பிழியும்
வெள்ள வேதனை வேலன்பாய் பாய்ந்திட
எள்ளி நகைக்கும் எதிரிகள் முன்னே
எதிர் நீச்சல் போடும் துளி நீர்

துளிநீர் சிந்திட துன்பம் குறையுமென கட்டிவைத்த கண்ணாடி கோட்டைக்குள்
கல்லடி பட்டு கலங்கிய இருதயமே
சிந்தாதே கண்ணீரை – சிந்திபல
மந்திரக் கதை சொல்லும்

பூட்டி வைத்த மனத்தின் சோகம்
சாட்டை அடியால் துளிநீர் சிந்த
விழிநீர் பலரின் வேதனை சொல்லி
துளிர்விடும் தர்க்கம் சுயதோற்றம் தோன்றும்

விலையென்ன வேண்டுமென விண்ணப்பித்து சொல்லிவிடு
வீணாக சிந்திடாதே விலை மதிப்பு
மிக்க கண்ணீர்துளி கரைந்திட
கருகி விடும் கண்ணீர் குருதி

ஆனந்தக் கண்ணீரும் அரங்கேறும்
அவ்வப்போது
அவமானத்தின் கண்ணீரும் மண்ணில்
புழுவாய்
மடியத்துடிக்கும் தருணம்
துளிநீர் துளிர் விடும்

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading