தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை

பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே

காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா சத்தமும்

பந்தலில் சர்பத்
பரிமாற பலரும்
வெய்யில் தாகம்
தண்ணீராய் தணித்தும்

வெளிநாடு உறவுகள்
வெயிலை தாங்காது
வெந்த கால்கள்
நடக்கமுடியாது நிழலை
தேடி ஓடினரே
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading