நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இசை

ஜெயம்

இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு புகழ்பாட இதைவிட்டால் எது
மறந்துவிட சோகத்தை மருந்தாக அது

பிணிதனை தீர்த்துவிட இதுவன்றோ அருமருந்து
தனிமையிலும் செவிகளுக்கு இனிமையான விருந்து
கல்மனத்தை கரைத்துவிடும் இசையொரு அற்புதம்
உள்ளத்தை உருக்கி உயிருக்குள் கலந்துவிடும்

தன்னை மறந்து பறவையாக பறப்பார்
உண்ணும் உணவாக ஒருநேரம் எடுப்பார்
இன்னிசை என்பது நிகழ்த்தும் அதிசயத்தை
மண்வாழ் உயிர்களெல்லாம் அடையும் அச்சுகத்தை

தெய்வத்தோடு இணைக்கும் இசையொரு மெய்மொழி
மெய்யான உவகையை உருவாக்கும் தேனொலி
இசைக்குள்ளே தொலைபவர்கள் நாளாந்தம் கோடி
இசைகேட்டால் போகாதே செடிகொடியும் வாடி

Nada Mohan
Author: Nada Mohan