“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன்

இன்னமும் மாறவில்லை

காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது தினமும் சூடாய் வெப்பநிலை

நாட்டு நடப்பும் மாறுது இன்று
நன்றாய்ச் சரியுது பொருளாதாரமும்
வாழ்க்கை நிலையும் மாறுது
வர்த்தகப் போரும் உலகிடை மூளுது

உலகப் பரப்பில் உருளும் விலைவாசி
உயர்த்தும் வரியும் அமெரிக் அதிபர்
கலகம் பிறக்கும் பங்குச்சந்தையும்
கணணி வாழ்வில் கடுகதி பணவீழ்ச்சி

நேரமாற்றமும் மாறி விட்டது
தூரப்பயணமும் கூடி விட்டது
விலைவாசி மட்டும் குறையவில்லை
விந்தை மனிதர் செயல்கள் மட்டும் மாறவில்லை

நகுலா சிவநாதன் 1804

Nada Mohan
Author: Nada Mohan