அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

இரா.விஜயகௌரி

கனவுச்சாலை…………

விடியும். பொழுதுகளை
கனவுச் சுமை தாங்கி நிதம்
நினைவுப் பொதி சுமந்த
கழுதைகளாய். நகர்கின்றோம்

அழுத்தும் பெரும் சுமைகள்
அயர்ச்சிப் பணிச்சிலந்தி
அமுக்கும் பெரும் கடன்கள்
அனைத்தும் நம் தோளில்

விலக்க. நினைத்தாலும். இவை
விலகா. தோழர்களாய்
நாளைப் பொழுதுக்காய்
இன்றைத்தொலைத்தோடுகின்றோம்

வாழ்ந்த. பொழுதேது. நாம்
மகிழ்ந்தெழுதும். கணமேது
அலைந்து. களைத்து. மனம்
அயர்வின் தொடுபுள்ளி. தானேது

எமக்கேன் அமைதியில்லை
கனவுச்சாலைகளில். நாம் நிதமும்
புரவிச். சவாரிகளில். -எம்
புதையலைத். தொலைக்கின்றோம்

நிறைவைக். கொண்டெழுவோம்
விரவிக். கரம் இழைவோம்
உறவுப். பின்னலிலே. எம்
உயர்வின். வெற்றி கொள்வோம்

Nada Mohan
Author: Nada Mohan