இரா விஜயகௌரி

பிரியாத உறவுகள்

விரியாதகனவுகளோடு
நித்தமும் பயணிக்கும்
பிரியாத உறவுகள் அவை
புரியாத நேச இழைவெழுத

அழியாத வலைப்பின்னல் ஆங்கே
மொழியாத. உணர்வுகளை
விழியால் குழைவெழுத-நித்தம்
அழையா விருந்தாளி. போலிவர்

சொரியாத மலராய் சொரிந்தபடி
வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ
எழிலாகும். விடியலே. -நம்மை
உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும்

பரிவோடு. கரைகின்ற பாசமும்
பழகிடில் கனிந்திடும் நேசமும்
வேஷமே. இல்லாத காதலும்
அன்பின் பரிமாணப்புதையல்களாம்

ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில்
அடடா வானவில். பேரெழில் மொழிந்திட
எத்தனை அழகியல் உறவிலே
பிரியாத வரமாகும் தலைமுறை

Nada Mohan
Author: Nada Mohan