” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போர்க் கோலம்

ராணி சம்பந்தர்

காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்

மெல்ல மெல்லக் கூட்டுச் சேரும்
பக்கவாத்திய நாடுகளாலும்
உருக்குலையும் அரபு நாட்டில்
கருகிச் சாம்பலாகுதே பிஞ்சுப்
பாலகர்கள்

அணுகுண்டுப் போர்வையில்
ஒளிந்துள்ள மர்ம இரகசியம்
ஆயுத வாள் முனையில் தேன்
பூசிய விற்பனை ஆயதங்கள்

எதனால் இந்த அகோர வாழ்வு
ஏனிந்த உதிரம் கொட்ட வேள்வி
நாளும் பொழுதும் காணுமிந்த
சீர் கேடான நார் கிழிந்த போர்க்
கோலம்

ஆளுமந்த அரசுத் தலைவர்கள்
மூளுமிந்தத் தீப்பிழம்புப் பாளுங் கிணற்றில் வீழாது
சிந்தித்து செயலாற்றுவாரா
போர்க் கோலம் தொடராது .

Nada Mohan
Author: Nada Mohan