வர்ண வர்ணப் பூக்கள் 65

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025

வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி
காலமெல்லாம் மகிழ்ச்சி

கொடியில், செடியில், நீரில்
காலை, மாலை, இரவு
பச்சை, சிவப்பு, மஞ்சள்
பல வகையாய் வண்ணமாய்

பள பளவென மலருமே
பற்றி கொண்ட மனவருத்தம்
பறந்துமிங்கே போய்விடும்
பட்டாம் பூச்சியாய் பறந்நிடுவோம்

மணவறை பிணவறையென
மனிதரோடும் ஒன்றிடும்
சில இதழ் விழுந்தாலும்
சருகாகி மீண்டேழும்….

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading