நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

இரா விஜயகௌரி

உலகின் நிலைமாற என்ன கொண்டு
வருகிறாய்………

நித்தமுமாய் சுழலுகின்ற உலகு ஆங்கு
சிந்தனையின் சுழலுக்குள் மாந்தர்
பல்லினத்தின் உயிர் உறையும் உலகில்
பல்கி வரும் பேரதிர்வைக் காணீர்

புதியவளாய் பிறக்கின்ற பொழுதே -உனை
தாங்கி நடை பயில்கின்ற ஆண்டே
எத்தனையாய் புதிய விதி படைத்து-இங்கு
எங்களையே தாங்கி நடை பயில்வாய்

காலநிலை மாற்றங்கள் நிகழ கரை
புரண்டோடுகின்ற. நீரலைக்குள் ஆழ்ந்து
வாடி எழும் மனித குலம் முன்னே
நில நடுக்க அகழி வெட்டி உமிழ்ந்தாய்

விசித்திரத்தின் சித்திரமாய் திகழும் -எங்கள்
வாழ்குறியின் பொருளெதும் ஆண்டே
நாம் திருந்தி மெல்ல உனை காத்தால்
மனம் மகிழ வாழ்வமைப்பாய் என்பேன்

உழைப்போடு உயர்வுள்ளல் கொண்டு
மனிதத்தை பேணி எழும் மாந்தர்
நிலை மாறி இவர் எதிர்நீச்சல் கொள்ள
ஏற்றமிகு ஆண்டே நீ. வருவாய்

Nada Mohan
Author: Nada Mohan