புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இரா.விஜயகௌரி

மூப்புக்குள். முனகுவதோ…………

மலரும் தினங்களின்
மகிழ்வின் செழிப்பினில்
தினமும் முகிழ்த்திடும்
அழகின் பொழுதுகள்

இரவும் பகலுமாய்
இருளும் ஒளியுமாய்
மகிழ்வும் துன்பமும்
மனதின். நினைவினில்

எழுதும். வாழ்வினில்
ஏற்றமும். இறக்கமும்
தளராப். போக்கினில்
தளிர் விடும் ஏற்றமே

விலகா. நேர்மையும்
விளைந்தெழும். பேரன்பதும்
இசைந்து. இழைந்தெழின்
வசப்படும். வாழ்வியல்

கொடுத்தவை. மீள் பெற
விதைத்தவை. அறுவடை
விஞ்சிடும். பொழுதுகள்
மீள் தரும்நினைவலை

மூப்பென்ன. முடங்கிடவோ
நிறைத்த அனுபவம்
நிறைந்தணைக்கும் உறவலையுள்
தொட்டெழுதும் முதுமைக்கு

ஈடு இணை வேறெதுவோ
முனகாமல் முடங்காமல்
உயிர்ப்புடனே பொறித்தெழுந்தால்
வாழ்கதைக்கும் பொருள்நிறையும்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading