இரா.விஜயகௌரி

கைக்குள் கையாய்கைத்தொலைபேசி……….

கைக்குள் கையாய் -நமை
கையகப்படுத்தும்
வலையகப்பின்னல்
வையகம் தொட்டெழும்

பிரியாத் தோழி-அவள்
பிணைத்தெழும் ஆழி
வினாடியுள் நுழைந்து -நமை
விரயமும் செய்திடும் அரக்கி

நல்லவை தொடுவாள்-நமை
நாணிடவும் வைப்பாள்
தனை தொட்டவர் தம்மை
அவர் பயன் தனில் நிறைப்பாள்

இவள் இல்லா நொடிகள்
இழந்தவை போல் தொடும்
காலச்சுழலில் கலந்து எழுந்து
உழைப்பவர் தமக்கு உயிரும் தருவாள்

பயன் கொள வைத்தால்
ஊனாய் நிறைவாள்
உழன்று கிடந்தால்-நமை
உளைச்சலில். நிறைப்பாள்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading