” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

கைக்குள் கையாய்கைத்தொலைபேசி……….

கைக்குள் கையாய் -நமை
கையகப்படுத்தும்
வலையகப்பின்னல்
வையகம் தொட்டெழும்

பிரியாத் தோழி-அவள்
பிணைத்தெழும் ஆழி
வினாடியுள் நுழைந்து -நமை
விரயமும் செய்திடும் அரக்கி

நல்லவை தொடுவாள்-நமை
நாணிடவும் வைப்பாள்
தனை தொட்டவர் தம்மை
அவர் பயன் தனில் நிறைப்பாள்

இவள் இல்லா நொடிகள்
இழந்தவை போல் தொடும்
காலச்சுழலில் கலந்து எழுந்து
உழைப்பவர் தமக்கு உயிரும் தருவாள்

பயன் கொள வைத்தால்
ஊனாய் நிறைவாள்
உழன்று கிடந்தால்-நமை
உளைச்சலில். நிறைப்பாள்

Nada Mohan
Author: Nada Mohan