” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வெற்றியுடன் உயர்வாய் மகளே!

நகுலா சிவநாதன்
வெற்றியுடன் உயர்வாய் மகளே!

வேராக கல்விதனை வென்றிட்ட மகளே!
சீரான உயர்வுகளை சந்தித்தே நீ
நேராக துணைப்;பேராசிரியராக இன்று
நேர்த்தியாய் வந்தாய் பூரிப்பாய் வென்றாய்

கற்றிடும் கல்வியே காலத்தின் விதையே
பற்றிடும் பக்குவம் அறிந்தே உயர்ந்தாய்
சுற்றிலும் முயற்சி சுடராய் அறிவும்
பெற்றிட்டு உயர்வாய் பேறுடன் நீயும்

பெற்றோர் வாழ்த்த பெருமையும் பெற்று
உற்றோர் மதிக்க உளமார நீயும்
நற்றவ கல்வியால் நனிசிறப்பு பெற்று
வென்றே உயர்வாய் வாழி மகளே!

நகுலா சிவநாதன் 1845

Author: