கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

வாழ்க்கையின் அர்த்தம்

வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு நாளும் பிறப்பு
கனவுகள் தாங்கியே ஓட்டம்

விழுந்து எழுந்து படித்த பாடம்
வலியை தாங்கும் பலமும் சேரும்
சிரிப்புக்கு பின்னால் மறைத்திருக்கும் கண்ணீர்
புதிய நம்பிக்கையின் வேருக்கது தண்ணீர்

வாழ்க்கையின் அர்த்தம் வெறுமனே உயிர் வாழ்வதா
இதயங்களை உடைக்காமல் இதயங்களில் கூட்டியேறுவது
இறுதியில் எடுத்துச் செல்வது எதுவுமில்லை
ஆனால் ஆயுள்முழுவதும் நினைக்கும்படி அன்பை விட்டுச்செல்லலாம்

ஜெயம்
28-05-2026

Nada Mohan
Author: Nada Mohan