” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“விலையில்லா வாழ்க்கையிலே”

நேவிஸ் பிலிப் கவி இல (573)

சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம் ஏராளம்
போர்கள் ஒரு பக்கம்
ஆட்சியைப் பிடிக்க
மாயக் காட்சிகள் மறு பக்கம்

இயற்கை அழிவுகள் ஒரு புறம்
இலஞ்சமும் வஞ்சமும் மறு புறம்
மக்கள் அவதியுற , நாளும் நிகழும்
அச்சுறுத்தல்கள் உச்சமாக

அமைதியும் ஆத்ம திருப்தியும்
அவ்வப்போது வந்து போக
அரசியலின் தாக்குதல்கள்
வறுமைப் பிடியகல ஆங்காங்கே
போராட்டங்கள்

நீதியின் தராசுகள் சாய்வது
எந்தப் பக்கம் என்பது
யாருக்கும் புரியாமலே
கண்கட்டு வித்தையென

அமுலாக்கல் துறையின் சிறப்பு
புலனாய்வுத் துறையின் உளவு
விரைந்தோடும் வாகனப்பயணம்
நிலையில்லா வாழ்க்கைக்கு
விலை பேசும் அவலம்
வேறுபாடும் பாகுபாடும்
எல்லாமும் சமமே இங்கு
நன்றி,,,,,,,,,,,,,

Author: