தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

இரா.விஜயகௌரி

கைக்குள் கையாய்கைத்தொலைபேசி……….

கைக்குள் கையாய் -நமை
கையகப்படுத்தும்
வலையகப்பின்னல்
வையகம் தொட்டெழும்

பிரியாத் தோழி-அவள்
பிணைத்தெழும் ஆழி
வினாடியுள் நுழைந்து -நமை
விரயமும் செய்திடும் அரக்கி

நல்லவை தொடுவாள்-நமை
நாணிடவும் வைப்பாள்
தனை தொட்டவர் தம்மை
அவர் பயன் தனில் நிறைப்பாள்

இவள் இல்லா நொடிகள்
இழந்தவை போல் தொடும்
காலச்சுழலில் கலந்து எழுந்து
உழைப்பவர் தமக்கு உயிரும் தருவாள்

பயன் கொள வைத்தால்
ஊனாய் நிறைவாள்
உழன்று கிடந்தால்-நமை
உளைச்சலில். நிறைப்பாள்

Nada Mohan
Author: Nada Mohan