பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“பெண்ணே”
காலை வெளியான
காலைக்கதிரில்
கோரக்கொலையின்
கொடுமையின் பின்னணி.
மட்டுவில் பெண்ணாள்
மகவு மூன்றுள்ளாள்
கட்டிய கணவன்
முட்டு நோயாளி
எட்டினல் வயது
எண்ணைந்தின் மேலாம்
கெட்டவன் தொடர்பு
கீழ்மை உறவு
செத்தவர் உடலம்
இட்டிடும் சுடலையில்
கூட்டிச் சென்று கொட்டினான் பெற்றோல்
உயிருடன் தீயை
உடலுக்கு ஊற்றி
கருகிச் சாக
காடையன் விட்டான்
ஊரார் கூடியும்
உயிரை மீட்டிலர்
தீயனை பொலீசில்
சேர்பித் தார்கள்
செத்த பெண்ணே!
செய்தது சரியா!
மனையில் கணவன்
மகவுகள் மூன்று
வயதுக்கு வந்த
வாலிபர் வனிதை
நினைவில் கொள்ள
நீ ஏன் மறந்தாய்?
பெண் என்றாலே
பேயும் இரங்குமாம்
மண்ணின் பெருமையை
மாசுற செய்தனை
மன்னிக்க உன்னை
மறுக்குதே நெஞ்சம்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading