சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஒளவை

வழிகாட்டு இறைவா…..
======================
ஆதி முதல்வனே
அண்டம் ஆள்பவனே
சோதி வடிவனே
சொர்க்கம் உன்பதமே
நீதி வழுவுதே
நித்தமும் பூமியில்
சேதிகள் மூலம்
சொல்வது என்னவோ

வாதிட ஏதுளது
வந்தபயன் கொண்டோமே
தீதினில் உழல்கின்றோம்
திண்டாடி மாழ்கின்றோம்
நாதியற்ற உயிர்களோ
நானிலத்தில் பலகோடி
பாதிப்பைக் குறைக்கும்
பரிகாரம் காட்டிவிடு

கங்கையைத் தாங்கிக்
கனத்தினைக் குறைத்தாய்
திங்களைக் காத்து
சடையிலே வைத்தாய்
மங்கிடும் பூமியின்
மானத்தைக் காக்கத்
தங்கிடு இங்கே
தாங்கவில்லைத் துன்பம்

பொங்கிடும் தீமையின்
போக்குகள் நீளுதே
எங்கிலும் உந்தன்
எண்ணமும் மறையுதே
பங்கங்கள் சூழ்ந்து
பாரெங்கும் துன்பமே
எங்களை மீட்க
ஏதொரு வழிகாட்டு.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan