10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஒளவை
வழிகாட்டு இறைவா…..
======================
ஆதி முதல்வனே
அண்டம் ஆள்பவனே
சோதி வடிவனே
சொர்க்கம் உன்பதமே
நீதி வழுவுதே
நித்தமும் பூமியில்
சேதிகள் மூலம்
சொல்வது என்னவோ
வாதிட ஏதுளது
வந்தபயன் கொண்டோமே
தீதினில் உழல்கின்றோம்
திண்டாடி மாழ்கின்றோம்
நாதியற்ற உயிர்களோ
நானிலத்தில் பலகோடி
பாதிப்பைக் குறைக்கும்
பரிகாரம் காட்டிவிடு
கங்கையைத் தாங்கிக்
கனத்தினைக் குறைத்தாய்
திங்களைக் காத்து
சடையிலே வைத்தாய்
மங்கிடும் பூமியின்
மானத்தைக் காக்கத்
தங்கிடு இங்கே
தாங்கவில்லைத் துன்பம்
பொங்கிடும் தீமையின்
போக்குகள் நீளுதே
எங்கிலும் உந்தன்
எண்ணமும் மறையுதே
பங்கங்கள் சூழ்ந்து
பாரெங்கும் துன்பமே
எங்களை மீட்க
ஏதொரு வழிகாட்டு.
ஒளவை.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...