கீத்தா பரமானந்தன்

உழைப்பாளி

நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/
நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/
சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/
உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/

தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/
நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/
ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/
செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/

சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/
வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/
வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/
விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி //

கீத்தா பரமானந்தன்
10-05-22

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading