தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்

குருதிப்புனல்!
சந்ததி சந்ததியாய் வாழ்ந்த பூமியில்
வந்தவனும் போனவனும் போட்ட வெறியாட்டம்
குந்திஇருக்க இடமின்றிக் கொத்துக் குண்டிடை
நொந்து தவித்து நிர்க்கதியாய் நின்றநிலை

பிஞ்சுகள் பூக்கள் பேதையாம் மூத்தோர்
வஞ்சகரின் இனவெறியில் வதைபட்ட கோரம்
மந்தபுத்திக் காரனால் கருவறையும் கல்லறைம்
கந்தகக் காற்றிடை ஒன்றான சாபம்!

சொந்தங்கள் இழந்து அங்கங்கள் சிதறி
அபலைகளாய்த் தமிழர் அல்லலுற்ற கோலம்
சமாதனமன்றுகளும் சாமியும் சத்தமற்றுப் பார்த்திருக்க
அந்தமானோர் ஆயிரமாய் மறக்குமா மறக்கலாமா?

நந்திக்கடலும் குருதிப்புனலாக நாநனைக்க நீரின்றி
அந்தரிச்ச பொழுதும் பந்தங்களைத் தேடலும்
வந்தலைத்து நிற்கிறதே வாழ்வெல்லாம் எங்களுடன்
இந்தநிலை மாறிடுமா இதயங்கள் கேவலுடன்!

கீத்தா பரமானந்தன்
13-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading