மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

குருதிப்புனல்!
சந்ததி சந்ததியாய் வாழ்ந்த பூமியில்
வந்தவனும் போனவனும் போட்ட வெறியாட்டம்
குந்திஇருக்க இடமின்றிக் கொத்துக் குண்டிடை
நொந்து தவித்து நிர்க்கதியாய் நின்றநிலை

பிஞ்சுகள் பூக்கள் பேதையாம் மூத்தோர்
வஞ்சகரின் இனவெறியில் வதைபட்ட கோரம்
மந்தபுத்திக் காரனால் கருவறையும் கல்லறைம்
கந்தகக் காற்றிடை ஒன்றான சாபம்!

சொந்தங்கள் இழந்து அங்கங்கள் சிதறி
அபலைகளாய்த் தமிழர் அல்லலுற்ற கோலம்
சமாதனமன்றுகளும் சாமியும் சத்தமற்றுப் பார்த்திருக்க
அந்தமானோர் ஆயிரமாய் மறக்குமா மறக்கலாமா?

நந்திக்கடலும் குருதிப்புனலாக நாநனைக்க நீரின்றி
அந்தரிச்ச பொழுதும் பந்தங்களைத் தேடலும்
வந்தலைத்து நிற்கிறதே வாழ்வெல்லாம் எங்களுடன்
இந்தநிலை மாறிடுமா இதயங்கள் கேவலுடன்!

கீத்தா பரமானந்தன்
13-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading