புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சுடர்!
படர்கின்ற இருளைப்
பகலொளி ஆக்கப்
பதமொடு வந்தே
பரவிடும் இன்பம்!

சிரமங்கள் விலக்கிச்
சிந்திடும் ஞானம்
உரமதைப் பகரும்
உள்ளத்தில் நாளும்!

பேதங்கள் அகற்றப்
புறப்பட்ட நேசம்
சாவிலும் நின்றே
சரித்திரம் பகரும்!

அறமதும் கூடும்
அறிவியல் நாடும்
விரவிடும் சுடரென
விரட்டிடும் மூடம்!

தீபத்தின் சுடராய்த்
தீமைகள் பொசுங்கும்
அறிவதன் சுடரில்
அகிலமும் பணியும்

கற்றலிற் பற்றினில்
கனன்றிடும் முனைப்பினில்
காலமும் மின்னுவோம்
கனிந்திடும் சுடராய்!

கீத்தா பரமானந்தன்
10-04-2023

இருளெனும் மாய
இடரினைப் போக்கி
இயக்கிடும் ஞானம்
சுடரொளி யாகும்!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading