புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
மாவீர்ரே
———

தமிழர் மனதில் தடம் பதித்த
தங்க மணிகளே
தாரக மந்திரம் தமிழ்ஈழம்
தங்கவைக்க பாடுபட்டீரே
எங்கள் மண்மீட்புக்காய்
உங்கள் இன்னுயிர் ஈந்தவரே
தங்கள் பெருமை கூற
தரணியில் தமிழர் உண்டு காண்பீரோ
மன்னாதி மன்னரும் படை கொண்டு
வெல்ல
பொன்னான உம் கரத்தினால்
ஆயுதம் ஏந்தி வெல்ல
தன்மானம் காத்த வீர்ரன்றோ
தந்தை தாய் அரவணைப்பு இழந்தவரன்றோ
அன்னமின்றி தண்ணியின்றி
நடந்த கால் துவள
நித்திரை இன்றி நிம்மதி இன்றி
எடுத்த காரியம் முடிக்க
அயராது உழைத்தவரே
ஆத்ம அஞ்சலிகள்
அள்ளி மலரால் அர்ச்சிக்கின்றோம்
மாவீர்ரே உங்களையே
கெங்கா ஸ்ரான்லி
29.10.23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading