மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சாந்தி

ஆன்மீகம் தரும்
மனதுக்கு சாந்தி.
மனம் அமைதி பெற்றால்
சாந்தி பெறும் உள்ளம்.

இறந்தவர் ஆன்மா
இறைபதம் அடைய
ஈகை செய்தல்
சாந்தி தரும்.

முதியோர் இல்லமதில்
முதுமைப் பெற்றாரை
முடக்கிய மகனுக்கு
ஏது மனச் சாந்தி.

தன்னலமற்ற சேவை
தருமே சாந்தி.
சுய நலமுள்ள வருக்கு
கெடுமே சாந்தி.

மெளனமாக இருந்தால்
மனம் அடையும் சாந்தி.
குறள் வழி ஒழுகினால்
குமூகமே அடையும் சாந்தி.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading