10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கெங்கா ஸ்ரான்லி
வைகாசியில்
வைகாசியும் பிறந்தது
வஞ்சியரும் மகிழ்ந்தனர்.
துஞ்சியவர் துயிலெழும்பி
மஞ்சளும் பூசிக் குளித்தனர்.
மஞ்சள் வெயிலிலே
மலர்ந்தன மலர்கள்.
வண்டுகள் ரீங்காரம்
சுண்டியே இழுத்தது.
மயங்கிய மலர்களும்
வாவென வரவேற்க.
வண்டினம் புணர்ந்தது
மகரந்த மயக்கத்தில்.
தேனுண்ட இனிமை மயக்கம்
தேரா மண்ணில் முடக்கம்.
அந்தோ தேயந்துவிட்டதே
வண்டின் இணக்கம்.
ரீங்காரமிட்ட வண்டு
லீலைகள் புரியும் எண்டு.
நினைத்த மலர்ச் செண்டு
நனைந்தன மழையில் நின்று.
பெருமழை பெரும்புயல்
முறிந்தன மலர்கொப்பு.
நிலத்திலே வாடி விழ
வெள்ளம் இழுத்து
சென்றது மலரையும்
வண்டையும்.
வைகாசியில் இதுவும்
ஒரு வன்மையா என நினைத்தபடி.
கெங்கா ஸ்டான்லி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...