நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

தூரத்துப் பச்சை
வாழ்க்கைக் கனவுகள்
வார்க்கப்பட வேண்டிய
சாரத்தின் தத்துவம்

அக்கரை இருப்புகள்
இக்கரை பச்சையென
முப்பொழுதே உணர்ந்து
முன்னோர்கள் சொன்னவை

இருப்பது கந்தையாகினும்
மானத்தை மறைக்காது
பட்டுக்கு ஆசைப்பட்டு 
பரிதவிப்பு பரிதாபம்

கிடைப்பது வாழ்வில்
நொடியில் கிடைப்பதல்ல
உழைப்பதன் மகிமைதான்
உயர்த்தும் வாழ்வினில்

அத்திவாரமற அழகான
மாளிகை கட்டினால்
இத்தரையில் அவை
எப்படிநிலைத்திடும் ?

விவேகமில்லா வீரமெமை
வீழ்ச்சிக்கு அழைத்திடும்
அறிவுடன் செயலாற்றினால்
அடுக்கடுக்காய் வெற்றியே

அர்த்தமில்லா ஆசைகளை 
அடைய முயன்றிட்டால்
அழிக்கின்ற கணங்கள்
அடுத்தடுத்து வந்திடும்

உண்மையாய் வாழ்ந்து
உழைத்து மகிழ்ந்திட்டால்
அனைத்து ஆனந்தம்
அமைதிதான் வாழ்வெல்லாம்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan