புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
வரப்புயர
***********
எல்லையிலா வரம்பு வேண்டும்
தொல்லையெல்லாம் அகலவேண்டும்
புலத்திலும் பொருளாதார வீழ்ச்சியே
புலம்புகிறோம் நாளும் விலைவாசி ஏற்றம் கண்டு
குமுறுகிறோம் குமுகாயம்
உயர்ந்திட
நம்வரம்பு உயர்ந்திட வேண்டுமன்றோ!
எதிர்நீச்சல் போட்டேதான்
கதிரவனைப்போலே ஒளிகொடுத்தே
ஊரில் எல்லாம் வரப்புயர
கூரிய அறிவுகொண்டு
காரியம் ஆற்றிடுவோம்
சேரிக்குள்ளும் செதுக்கல் செய்வோம்
பாரினில் பாரதி சொன்னதுபோல்
சாலைகள் அமைப்போம் நல்ல
ஆலைகள் அமைப்போம்
புல்லுருவிகள் வரம்புயர இடங்கொடாது
தன்னிறைவு காணும் தனிநாடு
முன்னிலையில் நிற்க முழுமூச்சாய் உழைப்போம்!

நன்றி வணக்கம்.
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள். திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு மிக்க நன்றி. அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading