நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சக்தி சிறீனி சங்கர்

வணக்கம் ப.வை.அண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு பசுமை!

சூரிய ஒளியால் சூழலில் பசுமை
பாரினில் வீழும் பனித்துளி பசுமை
மாரியில் கொட்டும் மழைத்துளி
ஏரியில் பூக்கும் ஆம்பல் பசுமை
சோலையின் காட்சி சொக்கவைக்கும் பசுமை
மாலையில் வானம் மனோரம்மியப் பசுமை
மலைகள் அருவிகள் மாபெரும் பசுமை(செல்வம்)
கலைகள் வளர்த்துக் காணலாம் பசுமை(நன்மை)
கோடையில் கொட்டிக் கிடக்கும் பசுமை
வாடையில் வீசும் காற்றும் பசுமை(குளிர்ச்சி)
கற்பக தருவின் கனியும் பசுமை (இனிமை)
அற்புதங்கள் ஏழும் அகிலத்தில் பசுமை (புதுமை)
கல்விக்கு உகந்த காலம் பசுமை(இளமை)
நல்வித்தை தந்தது நமக்குப் பசுமை(நன்மை)
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan