“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி சுயசெலவில் வந்திடுவேன் சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும் தாயகம் திரும்பிடுவேன் _ தம்பி உழைத்திடும் உள்ளமுண்டு உடலில் பலமில்லை _ தம்பி பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ _ தம்பி ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள் தொடரட்டும் _ தம்பி 🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம்

கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி
சுமந்த கருக்கதை
சுகப்படாது போனதடா தம்பி

வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி
சுயசெலவில் வந்திடுவேன்
சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி

விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும்
சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும்
தாயகம்
திரும்பிடுவேன் _ தம்பி

உழைத்திடும் உள்ளமுண்டு
உடலில் பலமில்லை
_ தம்பி

பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ
_ தம்பி

ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை
விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி

ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி
பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள்
தொடரட்டும் _ தம்பி

🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan