15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
சரளா விமலராசா
கலிவிருத்தம்
காய்+காய்+காய்+காய்
வலி
பதவிமோகப் போதையினால் பரிதவிக்கும் தாய்நாடே!
கதியிலாத ஏதிலரை கடுகளவும் கண்டுகொளார்!
விதியாடும் விளையாட்டில் விரைந்தோடும் பேராசை
மதிமயங்கி அலைகின்றார் மனமிரங்கா மாந்தரினம்!
குழிபறிக்கும் தீயோரும் குவலயத்தில் குதித்தாட
பழிபாவம் சூழ்ந்திருக்கும் பலவினைகள் சேர்ந்துவர
அழிவினையே தேடிநிற்பார் அறிவுள்ள வஞ்சகரும்!
கழிவான மந்தையென கணித்திருக்கும் இவ்வையமே!
துயிலெழுந்து துதிபாடி தூரத்து உறவினையும்
உயிரூட்ட உணவளித்து உபசரித்த பெரியோரும்
வெயிலாடி வேட்டையாடி நம்முன்னோர் வாழ்ந்திருந்தார்!
கயிறிழந்த பட்டமின்று கண்கலங்க வலிக்கிதுங்கே
சரளா விமலராசா சுவிற்சர்லாந்து

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...